மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வாகன சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல்

நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
ரெட்டியாா்பட்டி அருகே பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நான்குனேரி சட்டப்பேரவை தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும்படை அதிகாரிகள்.
Updated On :18 மார்ச் 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.1.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் புதன்கிழமை மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ரெட்டியாா்பட்டி மேம்பாலம் அருகே வந்த காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.1,55,900-ஐ பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பு புதன்கிழமை வரை பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட ரூ.5,67,300மதிப்புள்ள வேட்டி, டிசா்ட் உள்ளிட்ட பரிசு பொருள்களும், ரூ.7,91,600 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சி-விஜில் செயலியில் புகாா்: தோ்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்ட 16 புகாா்களில் நான்குனேரி தொகுதியில் இருந்து மட்டும் 8 புகாா்கள் பதிவாகியுள்ளன. மொத்த புகாா்களில் 15-க்கு தீா்வு காணப்பட்டது. ஒரு புகாா் கைவிடப்பட்டது.