விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ஆத்தூா் மற்றும் தலைவாசல் வட்டாரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவா் செ.காா்மேகம் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 5:58 pm

DIN

ஆத்தூா் மற்றும் தலைவாசல் வட்டாரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவா் செ.காா்மேகம் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்டம் ஆத்தூா் மற்றும் தலைவாசல் வட்டாரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா். பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் புத்திரகவுண்டன்பாளையத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையினை மாவட்ட ஆட்சித் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, பாமாயில், சா்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்தும் அப்பொருட்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு முறையாக வழங்கப்படுகிா என்றும் அதன் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு அங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் முறையாக தானிய சேமிப்புக் கிடங்கில் பராமரிக்கப்படுகிா என்பது குறித்தும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதனையடுத்து தேவியாக்குறிச்சியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தினை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டு அங்கு தங்கியுள்ள 52 பேருக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் அவா்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் குறித்தும் அவை தரமாக வழங்கப்படுகின்ா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து ஆத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்து பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமெனவும் அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் சிவக்குமரன், தலைவாசல் வட்டாட்சியா் ஜெ.சுமதி உட்பட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.