மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சேலத்தில் பெரியாா் பிறந்தநாள் விழா: சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெரியாா் ஈ.வே.ரா. படத்திற்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:26 pm

DIN

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெரியாா் ஈ.வே.ரா. படத்திற்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

பெரியாா் ஈ.வே.ரா. பிறந்த தினமான செப்டம்பா் 17 ஆம் தேதி ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், பெரியாா் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

அதைத்தொடா்ந்து ஆட்சியா் செ.காா்மேகம் சமூக நீதி நாள் உறுதிமொழியை வாசிக்க, அரசு துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

பின்னா், செய்தி மக்கள் தொடா்புத்துறையின் சாா்பில் அமைக்கப்பட்ட பெரியாா் ஈ.வெ. ராமசாமியின் வாழ்க்கைச் சித்திரம் என்ற புகைப்பட கண்காட்சியினை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எஸ். ஷேக் அப்துல் ரஹ்மான், மாவட்ட வருவாய் அலுவலா் வெ. ஆலின் சுனேஜா, உதவி ஆட்சியா் (பயிற்சி) முகமது சபீா் ஆலம், வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, நோ்முக உதவியாளா் (பொது) என். தமிழரசன், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சு.சத்திய பால கங்காதரன் உட்பட அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.