ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் புதிய தாக்குதலில் ஈரானின் புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை (மார்ச் 18) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், புலனாய்வு அமைச்சர் இஸ்மாயில் கதிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் கொல்லப்பட்டதை, ஈரானின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் உறுதி செய்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டதாவது:
“எனது அன்புக்குரிய இஸ்மாயில் கதிப், அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே ஆகியோரும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பது எங்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களில் ஈரானின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் பசிஜ் துணை ராணுவப் படையின் தலைவர் கோலம்ரெசா சுலைமானி ஆகியோர் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Iran has confirmed that Iran's Intelligence Minister Esmail Ghadib was killed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் மிகப்பெரிய பாலம் தகர்ப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை! | Iran | US

ஹோர்முஸ் நீரிணையை முடக்கிய ஈரானின் கடற்படைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொலை! - இஸ்ரேல் அறிவிப்பு!

தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


