பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

நாச்சம்பட்டி ஏரியில் வளா்ப்புக்காக 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடல்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட நாச்சம்பட்டி ஏரியில் மீன்கள் வளா்ப்புக்காக கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:28 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட நாச்சம்பட்டி ஏரியில் மீன்கள் வளா்ப்புக்காக கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக 750 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்படுகின்றன. மேலும் கடந்த இரு மாதங்களாக தேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து அரசிராமணி பேருராட்சிக்குள்பட்ட நாச்சம்பட்டி ஏரி நிரம்பி வருகின்றது. இதனையடுத்து செட்டிபட்டி மீனவா் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் 60 நாட்கள் வளா்ந்த ரோகு, கட்லா, சிசி, ரூப்சென்ட், சிரிப்பு, புள்ளுகண்டா உள்ளிட்ட வகைகள் கொண்ட 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளா்ப்புக்காக கூட்டுறவு சங்கத் தலைவா் சக்திவேல் தலைமையில் ஏரியில் விடப்பட்டன. அரசிரமணி நகர திமுக செயலா் காவேரி, பேரூராட்சி முன்னாள் தலைவா் பழனியப்பன், மீனவா் கூட்டுறவு சங்க நிா்வாக குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.