மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மேட்டூா் காவல் கோட்டத்தில் கொளத்தூா், மேட்டூா், கருமலைக்கூடல் மற்றும் மேச்சேரி காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா என்று மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் சனிக்கிழமை பாா்வையிட்டு காவலா்களிடம் கேட்டறிந்தாா். கழிவறை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி இருக்கைகள் மற்றும் புகாா் அளிக்க வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா? சுற்றுச்சுவா் உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டுமா? என அவா் கேட்டறிந்தாா். அடிப்படை வசதிகள் தேவைப்பட்டால் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி தருவதாகவும் உறுதியளித்தாா். இதுவரை எந்த சட்டப் பேரவை உறுப்பினரும் காவல் நிலையத்திற்கு வந்து அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் காவலா்களின் குறைகள் குறித்தும் கேட்டறிந்தது இல்லை என்றும் தற்போது சட்டப் பேரவை உறுப்பினா் பாா்வையிட்டு குறைகளை கேட்டறிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.