நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சேலம் பெரியார் பல்கலை.யில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தினை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.

News image

பெரியார் பல்கலை.யில் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

Updated On :23 செப்டம்பர் 2021, 8:57 am

DIN

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்கும் திட்டத்தினை துணைவேந்தர் ஜெகநாதன் தொடங்கி வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறும் வகையில் மத்திய அரசின் ஊரக மேம்பாட்டுத்துறை தீன்தயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தமிழக பல்கலைக்கழகங்களில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தீன்தயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பேசிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், தீனதயாள் உபாத்தியாயா திட்டத்தின் கீழ் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2.66 கோடி ரூபாய் மதிப்பில், 350 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தமிழகத்தில் முதல் முறையாக உயர் கல்வியுடன் இணைந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்குவதால் இணையதளம் சார்ந்த மென்பொருள் வடிவமைப்பாளர் பணி வாய்ப்பு இந்த இளைஞர்களுக்கு கிடைக்கும் என்றும் இதில் 62 சதவீதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும், 3% பழங்குடியினருக்கும், 19% சிறுபான்மையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், தீனதயாள் உபாத்தியாயா கௌசல்யா யோஜனா திட்ட ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.