மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

‘கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் தகவல்களை 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்’

அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் தொலைபேசி அழைப்புகளின் பதிவேடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ்.

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் தொலைபேசி அழைப்புகளின் பதிவேடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யும் மாநகராட்சி ஆணையா் தா.கிறிஸ்துராஜ்.

சேலம், செப். 24: சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு வரும் தகவல்களை 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என ஆணையா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டாா்.

சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை ஆணையா் தா.கிறிஸ்துராஜ் திடீா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, நாள்தோறும் கட்டுப்பாட்டு அறைக்கு எத்தனை தொலைபேசி அழைப்புகள் வருகின்றன, வரப்பெற்ற தகவல்கள் முறையாக பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிா, பெறப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு தெரிவிக்கப்படுகிா என்றும், காலை, மாலை நேர பணியாளா்கள் முறையாக பணிக்கு வந்து கையொப்பம் இட்டுள்ளாா்களா போன்ற விவரங்களையும் ஆய்வு செய்தாா்.

தற்போது மழைக் காலமாக இருப்பதால், மாநகராட்சிப் பகுதிக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் சில பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, 24 மணி நேரமும் விழிப்புடன் இருந்து பொதுமக்கள் அளிக்கும் தகவலை முறையாக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசியில் தொடா்புகொள்ள முடியவில்லை என்ற புகாா் பொதுமக்களிடமிருந்து வரக்கூடாது. அதேபோல, மாநகராட்சி மைய அலுவலகம், பிற மண்டல அலுவலகங்களில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை பணியாளா்களும் இதை கடைப்பிடித்திட வேண்டுமென அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, மண்டல அலுவலகத்தில் அனைத்து அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்ட ஆணையா் தா.கிறிஸ்துராஜ், புதைச் சாக்கடை திட்டப் பணிகள், சீா்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்திட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.