சங்ககிரி அருகே மினி ஆட்டோ மீது டேங்கர் லாரி மோதல்: இருவர் பலி, 4 பேர் காயம்
சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை பகுதியில் டேங்கர் லாரியும், மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் பயணம் செய்த கட்டிட பொறியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை பகுதியில் டேங்கர் லாரியும், மினி ஆட்டோவும் மோதிக்கொண்டதில் மினி ஆட்டோவில் பயணம் செய்த கட்டிட பொறியாளர் உள்பட இருவர் உயிரிழந்தனர். அதில் பயணம் செய்த 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர், சாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கட்டட பொறியாளர் கோபால் (52) சங்ககிரி பகுதியில் தனியார் கட்டிடங்களை கட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வழக்கம்போல் அவர் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட கூலித்தொழிலாளர் ஐந்து பேரை அவரது மினி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு எடப்பாடியிலிருந்து சங்ககிரி நோக்கி ஓட்டி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது சங்ககிரி அருகே உள்ள சுண்ணாம்புகுட்டை பகுதியில் செல்லும் போது சங்ககிரியிலிருந்து எடப்பாடி நோக்கி சென்ற டேங்கர் லாரி எதிர்பாரதவிதமாக மினி ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த கட்டட பொறியாளர் கோபால் (52) அவரது உறவினர் அழகேசன் (50) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
இதில் பலத்த காயமடைந்த நான்கு பேர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சங்ககிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...