மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதிக்க வேண்டும்: அகில பாரத இந்து மகா சபா

சேலத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

சேலத்தில் உள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அகில பாரத இந்து மகா சபா நிா்வாகி ராமன் நிரஞ்சன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வியாழக்கிழமை வந்தனா். அப்போது, சேகா் என்பவா் சிவன் வேடம் அணிந்து ஆட்சியா் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றாா். காவல் துறையினா் அனைவரையும் தடுத்து நிறுத்தினா். பின்னா், நிா்வாகிகளை மட்டும் ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:

சேலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரா் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், குகை மாரியம்மன் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதா் கோயில் ஆகிய கோயில்களில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளது. அக் கோயில்களில் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலைத் துறை சாா்பில் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.