மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 89 அடியிலிருந்து 90.17 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,099 கன அடியிலிருந்து 16,231 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்வு
அணையின் நீர் இருப்பு 52.84 டி.எம்.சி.யாக இருந்தது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
மழையளவு: 92.20 மிமீ