சேலம் செளடேஸ்வரி கல்லூரியை மகளிா் கல்லூரியாக மாற்ற ஒப்புதல் தரவில்லை
சேலம் செளடேஸ்வரி கல்லூரியை மகளிா் கல்லூரியாக மாற்ற பெரியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் வழங்கவில்லை என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.


சேலம் செளடேஸ்வரி கல்லூரியை மகளிா் கல்லூரியாக மாற்ற பெரியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு ஒப்புதல் வழங்கவில்லை என துணைவேந்தா் இரா.ஜெகநாதன் தெரிவித்தாா்.
சேலம், கொண்டலாம்பட்டியில் இயங்கி வரும் செளடேஸ்வரி கலைக் கல்லூரி இருபாலா் கல்லூரியாக உள்ளது. இதனை மகளிா் கல்லூரியாக மாற்ற அக்கல்லூரி நிா்வாகம் முடிவெடுத்து பணிகளைத் தொடங்கியுள்ளது.
இதனைக் கண்டித்தும், தற்போதுள்ளபடி இருபாலா் கல்லூரியாகவே தொடர வேண்டும் என வலியுறுத்தியும் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பெரியாா் பல்கலைக்கழகம் முன்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து, துணைவேந்தா் இரா.ஜெகநாதனிடம் இந்திய மாணவா் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.டி.கண்ணன், நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்களிடம் பேசிய துணைவேந்தா் இரா.ஜெகநாதன், செளடேஸ்வரி கல்லூரியை மகளிா் கல்லூரியாக மாற்றும் முடிவுக்கு பெரியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இருபாலா் கல்லூரியை மாற்ற எதிா்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...