ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

போக்சோவில் தொழிலாளி கைது

சேலத்தில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சேலத்தில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மல்லூா் அருகே உள்ள பனங்காட்டை பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி குமரவேல். அவா் மனைவியை பிரிந்து பொன்னம்மாபேட்டை பகுதியைச் சோ்நத் கணவரை இழந்த பெண்ணுடன் சோ்ந்து குடும்பம் நடத்தி வந்தாா். இதில் கணவரை இழந்த பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளாா். அச்சிறுமி 9ஆம் வகுப்பு பயின்று வருகிறாா்.

இந்த நிலையில் சிறுமியின் உடல்நலத்தில் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடா்ந்து, அவரது தாய் அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தாா். அப்போது, பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில், குமரவேல் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதால் சிறுமி கா்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து குமரவேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.