டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சேலத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:04 am

DIN

சேலம்: சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேலம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பணிகள் பழைய பேருந்து நிலையம் பகுதிகளில் இருந்த பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன இரண்டடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் அனைத்தும் தற்போது முடிவுரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டிட பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். நிலுவையில் உள்ள பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து பழைய பேருந்து நிலையத்தை இணைக்கும் பாலப் பணிகள் மற்றும் சாலை பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதால், அதனையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிறைவேற்றிட அதிகாரிக்கு உத்தரவிட்டதோடு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு பேருந்து நிலையத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கான வசதிகள்,  பயணிகளுக்கு தேவையான அடிப்படைத் தேவைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர ஆணையாளர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.