அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேளூரில் உலகத் தாய்ப்பால் வார விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
உறுதிமொழி ஏற்ற கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்.
Updated On :2 ஆகஸ்ட் 2022, 9:22 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா மற்றும் ஊட்டச்சத்து கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சி. பொன்னம்பலம் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். வாழப்பாடி அரிமா சங்கத் தலைவர், சித்த மருத்துவர் செந்தில்குமார், அன்னை அரிமா சங்கத் தலைவர் ஆசிரியை ஷபிராபானு ஆகியோர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த துண்டு பிரசுரங்கள்,  ஊட்டச்சத்து உணவு பொருட்கள் வழங்கினர்.

மருத்துவர் திவ்யபாரதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர் பத்மா, ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர்,  தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் ஊட்டச்சத்து உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

இந்த விழாவில், பேளூர் சித்த மருத்துவர் லட்சுமணன், வாழப்பாடி அரிமா சங்க பொருளாளர் முருகன், அன்னை அரிமா சங்க நிர்வாகிகள் பவித்ரா, சுதா பிரபு, சாந்தமீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், பேளூர் பகுதியில்   குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடி பணியாளர்களின் சார்பில், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து கண்காட்சி நடைபெற்றது.

இதில் உணவு தானியங்கள், காய்கறிகள், கீரைகள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.  இந்நிகழ்வில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பகுதி சுகாதார செவிலியர் மணிமாலா, செவிலியர்கள் அனுராதா, கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர் நிறைவாக,  கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டல் குறித்த உறுதிமொழி ஏற்றனர். மருத்துவமல்லா சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.