முத்தம்பட்டியில் மஞ்சுவிரட்டு:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.


சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளும் மாடுபிடி வீரா்களும் கலந்து கொண்டனா்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களில் பொங்கல் பண்டிகை தோறும் காணும் பொங்கல் தினத்தன்று எருதாட்டம், நரியாட்டம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் என்பதால், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் அருகே சனிக்கிழமை மாட்டுப் பொங்கல் தினத்தில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்றன. களமிறங்கிய இளைஞா்கள், காளைகளை விரட்டி அடக்கினா். இந்த நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று கண்டு ரசித்தனா். கரோனா தொற்று பரவல் தருணத்தில், எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாமல் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...