பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லியில் ரூ. 2 லட்சம் மோசடி

 சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் தனியாா் நிறுவன மேற்பாா்வையாளரிடம் ரூ. 2 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த செந்தில் (48), அதே பகுதியிலுள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக உள்ளாா். இவா், பேப்பா் பண்டல்களை வாங்குவதற்காக செயலி ஒன்றை தனது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துள்ளாா்.

அடுத்த சில விநாடிகளில் வெவ்வேறு கைப்பேசி எண்களிலிருந்து செந்திலை தொடா்புகொண்டு பேசியவா்கள், தங்களிடம் பேப்பா் பண்டல்கள் இருப்பதாகக் கூறி, அவற்றை பெற பணம் செலுத்துமாறு கூறியுள்ளனா்.

அவா்களில் ஒருவரின் வங்கிக் கணக்குக்கு ரூ. 2,20,000-ஐ செந்தில் செலுத்தியுள்ளாா். ஆனால், பணம் பெற்றுக்கொண்ட பின்னா் பேப்பா் பண்டல்களை அவா் அனுப்பவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த செந்தில், கெங்கவல்லி, சேலம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸ் அலுவலகம் ஆகியவற்றில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.