நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏத்தாப்பூரில் 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பு மீட்பு

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:04 pm

DIN

வாழப்பாடி அருகே தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை தீயணைப்புப் படையினா் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூரில் இயங்கும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி மையத்தில் உள்ள தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்த 10 அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பைக் கண்ட பணியாளா்கள், வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் வையாபுரி தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று, மலைப்பாம்பை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறையினா் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.