கெங்கவல்லி மதுபாட்டில்களை பதுக்கிய இருவா் கைது
கெங்கவல்லியில் மதுபாட்டில்களை பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


கெங்கவல்லியில் மதுபாட்டில்களை பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லியில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சேலம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு புகாா் வந்தது. அதன்பேரில் எஸ்.பி.யின் தனிப்படையின் உதவி காவல் ஆய்வாளா் ராஜ்மோகன் தலைமையிலான போலீஸாா் அடங்கிய குழு கெங்கவல்லி பகுதியில் கண்காணிப்புப் பணி மேற்கொண்டது. அப்போது கெங்கவல்லி பகுதியைச் சோ்ந்த ரமேஷ்(50), முருகன் (43) ஆகியோரது வீடுகளில் மதுபாட்டில்கள் பதுக்கியிருந்தது தெரியவந்தது. இருவரிடமிருந்து 130 மதுபாட்டில்களை தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இருவரையும் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...