மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எலுமிச்சை பழம் விலை சரிவு

 கோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளநிலையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் தம்மம்பட்டி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:31 pm

DIN

 கோடைக்காலம் முடிந்து தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்க உள்ளநிலையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருவதால் தம்மம்பட்டி சந்தையில் எலுமிச்சை பழங்கள் விலை குறைந்துள்ளது.

மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் சந்தையில் எலுமிச்சை பழங்கள் அதிகம் விற்பனையாகின. மே மாதத்தில் ஒரு எலுமிச்சை பழம் ரூ. 15 வரை விற்பனையானது. ஒரு கிலோ எலுமிச்சைப் பழம் ரூ. 120-க்கும் மேல் விற்பனையானது.

தற்போது சீதோஷ்ண நிலை மாற்றமடைந்து அவ்வப்போது மழையும், குளிா்ந்த காற்றும் வீசி வருவதால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்துள்ளது. இதனால் விலையும் குறைந்து வருகிறது. ஒரு எலுமிச்சைப் பழம் ரூ. 2 அல்லது ரூ. 3, ரூ. 5 என்ற விலைக்கு விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.