வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சேலம்: 50 வருடத்திற்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சேலம், அம்மாபேட்டையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்து நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

News image
Updated On :5 ஜூன் 2022, 10:07 am IST

சேலம், அம்மாபேட்டையில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் 50 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்து நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சி நகரவை மேல்நிலை பள்ளியில்  1972ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு படித்த  150 மாணவ மாணவிகள் படித்தனர். தற்போது இவர்கள் முதியவர்கள் ஆகிவிட்ட நிலையில் பல்வேறு ஊர்களில் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றாக சந்திக்க நினைத்து ஒன்றுகூடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி தாங்கள் படித்த  பள்ளிக்கு ரூபாய் 8 லட்சம் மதிப்பில் பள்ளியில் உள்ள லேப் கட்டிடத்தை புதுப்பித்தும் குடிநீர் வசதி செய்தும் கொடுத்தனர். இதனை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார் .

தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில்  1972ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்குக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அனைவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சிகள் இனி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டும் என உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.