6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கல்

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

News image
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு சான்றிதழ், கோப்பையை வழங்குகிறார் சங்ககிரி ரோட்டரி சங்கத்தலைவர் டி.ஹெலினாகிறிஸ்டோபர்.
Updated On :5 ஜூன் 2022, 1:46 pm

DIN

சங்ககிரியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன.

இண்டர் நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளை மற்றும் சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இண்டர் நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே கிளப் சங்ககிரி கிளையின் சார்பில் 8 வயது முதல் 20 வயதுவரை  உள்ள மாணவ, மாணவிகளுக்கு 20 எடை முதல் 50 எடை வரையிலான மாணவ, மாணவிகளுக்கு என தனிதனியாக போட்டிகள் நடைபெற்றது.

இதில் சங்ககிரி, சேலம், ஜலகண்புரம், மேச்சேரி, பள்ளிப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். சிறுவர்களுக்கான ஆண்கள் பிரிவில் திருமலைவாசன் முதல் இடத்திலும், வைகுண்டமுத்து 2வது இடத்திலும், மோனிஷ்குமார் 3வது இடத்திலும் வெற்றி பெற்றனர்.   சிறுமிகளுக்கான பிரிவில் பிரியதர்ஷினி முதல் இடத்திலும், கான்ஷிகா 2வது இடத்திலும், கரில்னாஸ்ரீ 3வது இடத்திலும் வெற்றி பெற்றனர்.

முதியோர்களுக்கான பெண்கள் பிரிவில் நந்தினி முதல் இடத்திலும், இராஜேஸ்வரி 2வது இடத்திலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சங்ககிரி ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் டி.ஹெலினாகிறிஸ்டோபர் தலைமை வகித்து சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினார். ரோட்டரி சங்கச் செயலர் என்.தியாகராஜன், பொருளாளர் கே.செந்தில்குமார், நிர்வாகிகள் ராமசாமி, திவாகர், கரோத்தே பயிற்சியாளர் அர்ஜூனன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.