ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வாழப்பாடியில் ஐவர் அணி கால்பந்து போட்டி

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாவட்ட அளவிலான ஐவர் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:27 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாவட்ட அளவிலான ஐவர் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

வாழப்பாடியில் என்.ஜி.ஆர், 149  கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லர்ஸ் சார்பில்  ஐவர் அணி கால்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றது.

Story image

வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில் சனிக்கிழமை காலை நடைபெற்ற விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர் புகழ் தலைமை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர்.

இந்த போட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன. இதில் சேலம் அவரஞ்சிஅம்மா அணி முதல் பரிசும்,  149 அணி இரண்டாம் பரிசும், வாழப்பாடி கருடன் மூன்றாம் பரிசும், வித்யா மெமோரியல் அணி நான்காம் பரிசும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு  கோப்பைகள், ரொக்கப்பரிசு சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை கவிஞர் மன்னன், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபிநாத், ஆர்.குணாளன் ஆகியோர் வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கபடி குழு நிர்வாகிகள் ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.