தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

News image
Updated On :6 ஜூன் 2022, 7:33 am

DIN

சேலம்: திங்கள்கிழமைதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக மாற்றுத்திறனாளிடம் மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வார்.

இதனடிப்படையில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் 21 பேருக்கு தலா 13 ஆயிரம் ரூபாய் மதிப்பில் செல்லிடைப்பேசிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய செயலி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உருமாற்றம் மூலம் படிக்க வசதியாக நவீன கருவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.