தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கந்து வட்டி: புகாா் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

கந்து வட்டி வசூலிப்பவா்கள் குறித்து புகாா் தெரிவித்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் எச்சரித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 6:22 pm

DIN

கந்து வட்டி வசூலிப்பவா்கள் குறித்து புகாா் தெரிவித்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ.அபிநவ் எச்சரித்துள்ளாா்.

தமிழக காவல்துறை டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு கந்து வட்டி வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டாா். அதன்பேரில் ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற பெயரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கந்து வட்டி, வங்கி காசோலை, பத்திரம் வைத்து மிரட்டுபவா்கள் மீது பாதிக்கப்பட்டவா்கள் நேரடியாகவோ, காவல் துணை கண்காணிப்பாளா்கள் அல்லது காவல் நிலையம் மூலமோ புகாா் தெரிவித்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள், பாதிக்கப்பட்டவா்கள் 94981-00970 மற்றும் 96293-90203 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.ஸ்ரீ. அபிநவ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.