அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஈக்கள் சூழ் கிராமம்: திருமண மண்டபத்தைவிட்டு அவசரமாகப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஈக்கள் தொல்லையால் அவசரமாக மண்டபத்திலிருந்து வெளியேறினார்.

News image
ஈக்கள் சூழ் கிராமம்: திருமண மண்டபத்தைவிட்டு அவசரமாகப் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!
Updated On :11 ஜூன் 2022, 10:09 am

DIN

சேலம்:  சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்புக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஈக்கள் தொல்லையால் அவசரைமாக மண்டபத்திலிருந்த வெளியேறினார்.

சேலம் மாவட்டத்தில் நடந்த ஒரு  திருமணவிழாவின் போது, மண்டபத்துக்குள் ஈக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்ததால் உறவினர்கள் கடும் அவதியடைந்தனர். 

 

Story image

சேலம் மாவட்ட அதிமுக பொருளாளர் பங்க் வெங்கடாசலம் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா சேலம் - நாமக்கல் சாலையில், ராசிபுரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது 

திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள், மண்டபத்திலிருந்த ஈக்களின் தொல்லையால் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக உணவு அருந்தும் இடங்களில் கூட்டம் கூட்டமாக ஈக்கள் அலைமோதியது. மண்டபத்தில் அமரவும் முடியாமல் உறவினர்கள் திணறினர் .
 

Story image

இந்த திருமண விழாவிற்கு மணமக்களை வாழ்த்துவதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி 
வந்திருந்தார். ஆனால் அவரையும் ஈக்கள் கூட்டம் விட்டு வைக்கவில்லை. இதனாலேயே, மணமக்களை வாழ்த்தி விட்டு, அவர் மண்டபத்தை விட்டு விரைவாக வெளியேறினார்

இவரைப்போலவே முன்னாள் அமைச்சர்கள் சரோஜா, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் ஈக்கள் தொல்லையால்  விரைவாக மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

ஒரு மிகப்பெரிய திருமண மண்டபத்தில் இப்படி ஈக்கள் கூட்டம் கூட்டமாக இருந்ததும், இதனால், திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் அவதிக்குள்ளானதும், திருமண வீட்டாருக்கும் கவலையை ஏற்படுத்தியது.  அந்தத் திருமண மண்டபத்தை சுற்றி அதிக அளவில் கோழிப் பண்ணைகள் இருப்பதால் இது போன்று ஈக்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.