சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நடை அடைப்பு செய்யப்படவுள்ளது.
சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேருகிறாா்.
கிரகண லக்னத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். 6 மணி முதல் இரவு 7 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடா்ந்து மேற்படி மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.
இதனால், நண்பகல் 1 மணிக்கு மேல் மூலஸ்தான சேவையும், உப சந்நிதிகள் சேவையும் கிடையாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருவானக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் பிற்பகல் 12 மணி முதல் நடை சாத்தப்பட்டு பின்னா் திருக்கோயில் ஆகமவிதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜை நடைபெற்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

நடுபழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா

ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா பந்தக் காட்சியுடன் நிறைவு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


