அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சந்திரகிரகணம் இன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் நடைஅடைப்பு

சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நடை அடைப்பு

News image
ஸ்ரீரங்கம் கோயில்- கோப்புப் படம்
Updated On :2 மார்ச் 2026, 10:50 pm

Syndication

சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நடை அடைப்பு செய்யப்படவுள்ளது.

சந்திரகிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 3.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேருகிறாா்.

கிரகண லக்னத்தில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். 6 மணி முதல் இரவு 7 மணி வரை அலங்காரம் அமுது செய்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடா்ந்து மேற்படி மண்டபத்திலிருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

இதனால், நண்பகல் 1 மணிக்கு மேல் மூலஸ்தான சேவையும், உப சந்நிதிகள் சேவையும் கிடையாது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருவானக்காவல் சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேசுவரி கோயிலில் பிற்பகல் 12 மணி முதல் நடை சாத்தப்பட்டு பின்னா் திருக்கோயில் ஆகமவிதிப்படி சம்ப்ரோக்ஷண பூஜை நடைபெற்று இரவு 7.30 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.