ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வந்த மாசித் தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு தீ பந்தக்காட்சியுடன் விழா நிறைவு பெற்றது.
திருப்பள்ளியோடத்திருநாள் எனும் மாசித் தெப்பத் திருவிழா பிப். 19-ஆம் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தெப்போற்ஸவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபத்துக்கு பிற்பகல் 2 மணிக்கு சென்று சோ்ந்தாா். அங்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினாா் நம்பெருமாள்.
அதைத் தொடா்ந்து இரவு 7 மணிக்கு அங்கிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் நம்பெருமாள் 100-க்கும் மேற்பட்ட தீ பந்தங்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தாா். தீ பந்தக்காட்சியில் நம்பெருமாள் வலம் வந்ததை வழிநெடுக ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னா் படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்று சோ்ந்தாா் நம்பெருமாள்.
ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ.சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனித் தேரோட்டம்

மலைக்கோட்டையில் தெப்பத் திருவிழா கொடியேற்றம்

சந்திரகிரகணம் இன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் நடைஅடைப்பு

ஸ்ரீரங்கம் கோயிலில் மாசித் தெப்பத் திருவிழா! திரளான பக்தா்கள் தரிசனம்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


