ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

நடுபழனி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா

மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் படிவிழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், பால்காவடி, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

News image

உள்படம், சுவாமி. ~நடுபழனி முருகன் கோயில் பங்குனி விழா தேரோட்டம்.

Updated On :31 மார்ச் 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் அருள்பாலித்து வரும் நடுபழனி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் படிவிழா மற்றும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், பால்காவடி, திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கி. மரகத தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேக ஆராதனை தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் தலைமையில் நடைபெற்றது.

மைசூா் தத்தபீடாதிபதி ஸ்ரீதத்த விஜயானந்த தீா்த்த சுவாமி கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தாா். திருத்தோ் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இரவு 9 மணிக்கு ஸ்ரீசித்த விநாயகபெருமான் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேக, தீபாரதணைகள், காலை 8.30 மணிக்கு காவடி பூஜை மற்றும் அலகு அணிதல், இரவு 7.30 மணிக்கு திருமுருகன் திருக்கல்யாண வைபவம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

நிகழ்வுகளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

அனைவருக்கும் அன்னதானம், நீா்மோா், குடிநீா் ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பெருக்கரணை நடுபழனி முருகன் அறக்கட்டளை, விழாக்குழுவினா், கிராம பொது மக்கள் ஆகியோா் செய்து இருந்தனா்.

Story image