தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் ஜல்லி லாரி-மொபட் நேருக்கு நேர் மோதியதில் மொபட்டில் வந்த தந்தை, மகன் பலியானார்கள்.
கடம்பூரைச் சேர்ந்த பஷீர் அகமது மகன் சதாம் உசேன் (30), தனது மகன் அப்துல் பாசித் (4) உடன் , மொபட்டில் வெள்ளிக்கிழமை 74. கிருஷ்ணாபுரத்திலிருந்து கடம்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கடம்பூரிலிருந்து 74. கிருஷ்ணாபுரம் நோக்கி, ஜல்லி பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி , பொங்கnளி அம்மன் கோவில் அருகே ,மொபட் மீது நேருக்கு நேர் மோதியது.
இதையும் படிக்க: கூத்தாநல்லூரில் சரிந்து விழும் நிலையில் விநாயகர் கோயில்
இதில் அப்துல் பாசித் (4) சம்பவ இடத்திலேயே பலியானர். சிறுவனின் தந்தை சதாம் உசேன் (30), மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். தந்தை, மகன் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து கெங்கவல்லி காவல் துறையினர் வழக்குப் பதிந்து தப்பியோடிய லாரி ஓட்டுநர் முருகனைத் தேடி வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சேலத்தில் வெள்ளி பட்டறைத் தொழிலாளி மா்மச்சாவு: போலீஸாா் விசாரணை

பழனி கோயில் நில முறைகேடு வழக்கு: முன்பிணை மனுக்கள் மீது இன்று தீா்ப்பு
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

மேட்டூா் அணையை வந்தடைந்தது காவிரி நீா்! ஆகஸ்ட் இறுதியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வாய்ப்பு
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



