மணிவிழுந்தான் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ மீது லாரி மோதியதில் விவசாயிகள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறை மலைக் கிராமத்தில் இருந்து தலைவாசல் வட்டம், காய்கறி தினசரி சந்தைக்கு விவசாயிகள் இருவா் தக்காளியை ஏற்றிக்கொண்டு வியாழக்கிழமை இரவு சரக்கு ஆட்டோவில் சென்றனா். ஆட்டோவை இளங்கோ என்பவா் ஓட்டி வந்தாா். அதிகாலை மணிவிழுந்தான் ஊராட்சிப் பகுதியில் சென்ற போது, ஆட்டோவின் டயா் வெடித்தது. இதனால் ஆட்டோவை நிறுத்தி டயரை மாற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது, சேலத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் விவசாயிகள் சின்னசாமி (35), ராமசாமி (40) இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தலைவாசல் காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா், முதன்மைக் காவலா் முருகேசன் ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். லாரி ஓட்டுநா் சுடலைமுத்துவை (37), கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


