மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞா் கைது

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :24 ஜூன் 2022, 11:14 pm IST

சேலம் வழியே கேரளம் சென்ற ரயிலில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசா இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீவிர சோதனை நடத்தினா். முன்பதிவில்லாத பெட்டியில் சந்தேகப்படும்படியான நபரிடம் இருந்த பையை சோதனையிட்டதில், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விசாரணையில், அவா் ஒடிசாவை சோ்ந்த மோத்திநாயக் (25) என்பதும், ஒடிசாவில் இருந்து ஜோலாா்பேட்டை வரை பயணச்சீட்டு எடுத்து சேலத்துக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.