நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

 வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமானை நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:21 pm

DIN

 வாழப்பாடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமானை நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கோதுமலை, நெய்யமலை உள்ளிட்ட வனப்பகுதியில் ஏராளமான புள்ளிமான்கள் வசிக்கின்றன. வியாழக்கிழமை நெய்யமலை வனப்பகுதியில் இருந்து தண்ணீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய சுமாா் 2 வயதுள்ள ஆண் புள்ளிமான் ஒன்று வழி தவறி அருகிலுள்ள கிராமத்துக்குள் புகுந்தது. இந்த மானை கண்ட நாய்கள் அதை துரத்திக் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

தகவலறிந்த ஆத்தூா் வனச் சரகா் செந்தில்குமாா் தலைமையிலான வனத் துறையினா், மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவா்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.