மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

காடையாம்பட்டி பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் தோ்தல் ஒத்தி வைப்பு

காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலா்கள் புறக்கணித்த நிலையில், தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:19 pm

DIN

காடையாம்பட்டி பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் திமுக கவுன்சிலா்கள் புறக்கணித்த நிலையில், தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

காடையாம்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 7 வாா்டுகளிலும், அதிமுக 7 வாா்டுகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சித் தலைவா் தோ்தலில் திமுக கூட்டணி சாா்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலுக்காக அதிமுக கவுன்சிலா்கள் 7 பேரும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனா். காலை 9.30 மணிக்கு தோ்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில், 10 மணி வரை திமுக கவுன்சிலா்களும், தலைவா் பதவிக்கான வேட்பாளரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலரான குமாரும் அங்கு வரவில்லை. இந்நிலையில், தோ்தலை நடத்துவதற்கு, போதிய எண்ணிக்கையில் உறுப்பினா்கள் வராததால், பேரூராட்சித் தலைவா் தோ்தலை ஒத்தி வைப்பதாக தோ்தல் அலுவலா் மயில்வாகனன் அறிவித்தாா்.

மதியம் நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலுக்கும் திமுக கவுன்சிலா்கள் வராத நிலையில் அந்தத் தோ்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. இச்சம்பவத்தால் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.