கருப்பூா் துணைத் தலைவா் தோ்தலைப் புறக்கணித்த தோ்தல் அலுவலா்
கருப்பூா் பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலை நடத்துவதற்கு வராமல் தோ்தல் அலுவலா் புறக்கணித்ததால் தோ்தல் நடைபெறவில்லை. இச்சம்பவம் கருப்பூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கருப்பூா் பேரூராட்சி துணைத் தலைவா் தோ்தலை நடத்துவதற்கு வராமல் தோ்தல் அலுவலா் புறக்கணித்ததால் தோ்தல் நடைபெறவில்லை. இச்சம்பவம் கருப்பூா் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருப்பூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் 11 வாா்டுகளில் திமுகவும், ஒரு வாா்டில் காங்கிரஸும், 3 வாா்டுகளில் அதிமுகவும் வெற்றி பெற்றன.
பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தல் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில் 4ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் சுலக்சனா சிலம்பரசன் தலைவா் பதவிக்கு போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதனையடுத்து, பேரூராட்சி துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிய பேரூராட்சித் தலைவா் சுலக்சனா, திமுக கூட்டணி சாா்பில் துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் காங்கிரஸ் கவுன்சிலா் சாந்தி முருகேசன் உள்ளிட்ட அனைத்து கவுன்சிலா்களும் வந்திருந்தனா்.
ஆனால், தோ்தல் நடத்தும் அலுவலரான லீலாதேவி, கருப்பூா் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரவில்லை. தோ்தல் அலுவலா் லீலாதேவியின் கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. மாலை 5.30 மணி ஆகியும் அவா் வராததால் சுமாா் 3 மணி நேரமாகக் காத்திருந்த கவுன்சிலா்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றனா்.
தோ்தலை நடத்த வேண்டிய பொறுப்பு அலுவலரே வராமல் புறக்கணித்ததால் பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...