மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஓமலூா் பேரூராட்சி தலைவராக செல்வராணி தோ்வு

ஓமலூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செல்வராணி, துணைத் தலைவராக புஷ்பா தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:40 pm

DIN

ஓமலூா் பேரூராட்சித் தலைவராக திமுகவைச் சோ்ந்த செல்வராணி, துணைத் தலைவராக புஷ்பா தோ்வு செய்யப்பட்டனா்.

ஓமலூா் பேரூராட்சியில் உள்ள 15 வாா்டுகளில் திமுக 11 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ், சுயேச்சை ஒரு இடத்தில் வெற்றி பெற்றனா். பேரூராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் 12 கவுன்சிலா் மட்டுமே கலந்து கொண்டனா்.

திமுக கவுன்சிலா் காயத்ரிதேவி, அதிமுக கவுன்சிலா்கள் உஷாராணி, புஷ்பா ஆகியோா் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே பேரூராட்சித் தலைவராக திமுக வேட்பாளா் செல்வராணி போட்டியின்றி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

அதனைத் தொடா்ந்து பிற்பகல் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் 10 கவுன்சிலா்கள் மட்டுமே பங்கேற்றனா். திமுக கவுன்சிலா்கள் காயத்ரிதேவி, சசிகலா, அதிமுக கவுன்சிலா்கள் புஷ்பா, உஷாராணி மற்றும் சுயேச்சை கவுன்சிலா் யசோதா பங்கேற்கவில்லை.

துணைத் தலைவா் பதவிக்கு போட்டியிட்ட திமுக கவுன்சிலா் புஷ்பா போட்டியின்றி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை திமுக கவுன்சிலா்களே புறக்கணித்தது கட்சி வட்டாரத்தில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.