மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கே.அன்பழகன் புதன்கிழமை பதவி ஏற்றார்.

News image
Updated On :9 மார்ச் 2022, 9:51 am

வாழப்பாடி: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கே.அன்பழகன் புதன்கிழமை பதவி ஏற்றார்.

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் திமுக சார்பில் பாபு (எ) வெங்கடேஸ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவை சேர்ந்த கே.அன்பழகன், போட்டி வேட்பாளராக களமிறங்கி மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 4 தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை.

இரு தினங்களுக்கு முன்பு சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். 

இதனையடுத்து புதன்கிழமை ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக கே.அன்பழகன் பொறுப்பேற்றார். இவருக்கு திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் முறையாக செய்து கொடுக்கவும், தேவையான பணிகளை மேற்கொள்வோம் எனவும், புதிய பேரூராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட கே.அன்பழகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.