வாழப்பாடி: சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த கே.அன்பழகன் புதன்கிழமை பதவி ஏற்றார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பேரூராட்சியில் திமுக சார்பில் பாபு (எ) வெங்கடேஸ்வரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவை சேர்ந்த கே.அன்பழகன், போட்டி வேட்பாளராக களமிறங்கி மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று 4 தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் அன்றைய தினம் பதவி ஏற்கவில்லை.
இரு தினங்களுக்கு முன்பு சென்னையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
இதனையடுத்து புதன்கிழமை ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக கே.அன்பழகன் பொறுப்பேற்றார். இவருக்கு திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
ஏத்தாப்பூர் பேரூராட்சிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும், மக்கள் எதிர்பார்க்கும் வகையில் முறையாக செய்து கொடுக்கவும், தேவையான பணிகளை மேற்கொள்வோம் எனவும், புதிய பேரூராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுக்கொண்ட கே.அன்பழகன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! நாளை வைகையில் எழுந்தளுருகிறார்!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


