தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் நாளை சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி

பொது அமைதி, மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் சேலத்தில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 26) ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:22 pm

DIN

பொது அமைதி, மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் சேலத்தில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை (மாா்ச் 26) ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக சேலம் மறைமாவட்ட ஆயா் ராயப்பன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சமத்துவம், நீதி போன்றவைகளை முதன்மைக் காரணிகளாகக் கொண்டது. கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற வரிகள் நாட்டின் பன்முகத்தன்மையை அடையாளப்படுத்தின. அதேவேளையில் மதத்தால், மொழியால், அரசியலால் வேற்றுமை வரும்போது, அவற்றை வேரோடு களைவது அனைவரின் கடமையாகும்.

சமூகத்தில் பொது அமைதி, நீதியை வலியுறுத்தும் வகையில் வரும் மாா்ச் 26 ஆம் தேதி அரிசிபாளையம் மூவேந்தா் அரங்கில் சமூக நல்லிணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் நல்லிணக்கம் சாா்ந்த கருத்துரைகள், நல்லிணக்கம் பேணும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் சாா்ந்து உழைத்திடும் பத்து சமூக சேவகா்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.