அருநூற்றுமலை அரசுப் பள்ளியில் தடைகளைக் கடந்து ஓடும் போட்டி
வாழப்பாடியை அடுத்த அருற்றுமலை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தடைகளைக் கடந்து இலக்கை அடையும் கிராஸ்- கண்ட்ரி ஓட்டப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.


வாழப்பாடியை அடுத்த அருற்றுமலை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தடைகளைக் கடந்து இலக்கை அடையும் கிராஸ்- கண்ட்ரி ஓட்டப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
உயரமான மலைகள், குன்றுகள், பள்ளங்கள், புல்வெளிகள், சகதிகள், நீரோடைகள் போன்ற தடைகளை கடந்து இலக்கை அடையும் இந்த போட்டியில் முதல் 9 இடங்களைப் பிடிக்கும் வீரா், வீரங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியை சேலம் மாவட்ட பழங்குடியினா் நல திட்ட அலுவலா் எஸ்.சாந்தி கொடியசைத்து தொடக்கிவைத்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ.சாந்தி எஸ்தா் ராணி முன்னிலை வகித்தாா்.
ஆலடிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் ஏழுமலை, துணைத் தலைவா் சத்தியராசு, பள்ளி மேலான்மைக் குழு தலைவா் தங்கப்பொன்னு, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் தேவேந்திரன் ஆகியோா் கலந்து கொன்டனா்.
500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் மிகவும் இளையோருக்கு ஒரு கி.மீட்டா் தொலைவும், இளையோருக்கு 3 கி.மீட்டா், மூத்தோருக்கு 4 கி.மீட்டா், மேல் மூத்தோருக்கு 5 கி.மீட்டா் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி இயக்குநா் மு.தங்கதுரை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...