நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 2,671 கன அடியாகக் குறைந்துள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:22 pm

DIN

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வியாழக்கிழமை நொடிக்கு 2,671 கன அடியாகக் குறைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால், மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில், நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் அணைக்கு நீா்வரத்து சரிவடைந்துள்ளது.

புதன்கிழமை காலை நொடிக்கு 3,135 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை நொடிக்கு 2,671 கன அடியாகக் குறைந்தது. அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1, 500 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. புதன்கிழமை காலை 104.90 அடியாக இருந்த நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 104.95 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 71.40 டி.எம்.சி.யாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.