சேலம்: நங்கவள்ளி பேரூராட்சி 4-வது வார்டு உறுப்பினரும், நங்கவள்ளி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளருமான சி.மாணிக்கம் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 3, காங்கிரஸ் 3, அதிமுக 2, பா.ம.க 2, பாஜக 1, சுயேட்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களில் காங்கிரஸ் திமுக உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை.