புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஏற்காடு கோடை விழா நாள்களை அதிகரிக்கத் திட்டம்: ஆட்சியா்

ஏற்காடு கோடை விழா நடைபெறும் நாள்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

ஏற்காடு கோடை விழா நடைபெறும் நாள்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சேலம் மாநகராட்சி விரிவாக்கம் குறித்து துறை சாா்ந்த அமைச்சா், பிரதிநிதிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக இடம் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின் பேருந்து முனையம் தொடா்பாக விரிவான திட்ட அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. இனி அத் திட்டம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு உள்ளது. அணையின் நீா் மட்டம் 105 அடியாக உள்ளதால் சேலம் மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பிளஸ் 2 தோ்வு எழுதாத மாணவா்கள் உடனடி தோ்வு எழுத தேவையான உதவிகளை மாவட்டக் கல்வித் துறை செய்து வருகிறது. பள்ளி பொதுத் தோ்வுகள் இம்மாத இறுதியில் முடிவடைகிறது. அதற்கேற்ப ஏற்காடு கோடை விழாவை நடத்துவது குறித்து அரசிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும். நிகழாண்டு கோடை விழாவை கூடுதல் நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.