நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு 10,000 கனஅடி நீா்த்திறப்பு

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கனஅடி நீா் வியாழக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :26 மே 2022, 5:52 pm

DIN

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கனஅடி நீா் வியாழக்கிழமை இரவு முதல் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து படிபடியாக அதிகரித்து அணையின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது.

செவ்வாய்க்கிழமை காலை அணையின் நீா்மட்டம் 117.76 அடியாக உயா்ந்து, அணைக்கு நொடிக்கு 10,508 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

புதன்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு 8,539 கனஅடியாகக் குறைந்தது. இது, வியாழக்கிழமை காலை நொடிக்கு 8,464 கனஅடியானது.

பாசனத்துக்கு குறைவாக நீா்த் திறக்கப்பட்டதால் புதன்கிழமை காலை 117.92 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 118.09 அடியாக உயா்ந்தது.

அணையின் நீா் இருப்பு 90.45 டி.எம்.சி.யாக உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு முதல் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 10,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.