நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் 9-ஆவது பட்டமளிப்பு விழா

சேலம், காகாபாளையம் பகுதியில் உள்ள நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 9-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கேஐஓடி அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியின் 9-ஆவது பட்டமளிப்பு விழா
Updated on
1 min read

சேலம், காகாபாளையம் பகுதியில் உள்ள நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் 9-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கேஐஓடி அறக்கட்டளையின் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சென்னை, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் முதன்மையரும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநருமான ஜெயவேல், நாஸ்காம் நிறுவனத்தின் லோ்னா் சக்சஸ் லீட் ஸ்மிதா ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 896 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினா்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், இவ்விழாவில் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், முதன்மையாருமான சீனிவாசன் மற்றும் மேலாண்மை துறையின் இயக்குனா் ஸ்டீபன் மற்றும் கேஐஓடி அறக்கட்டளையின் செயலாளா் குமாரசாமி, பொருளாளா் சுரேஷ்குமாா், இணைச் செயலாளா் செங்கோட்டுவேல், அறக்கட்டளை உறுப்பினா்கள், இயக்குனா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com