மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி, காந்திநகா் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா

தம்மம்பட்டி மெயின் மற்றும் காந்திநகா் நடுநிலைப்பள்ளிகளில் கலைத்திருவிழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :26 நவம்பர் 2022, 2:50 am

DIN

தம்மம்பட்டி மெயின் மற்றும் காந்திநகா் நடுநிலைப்பள்ளிகளில் கலைத்திருவிழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

தம்மம்பட்டி மெயின் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவுக்கு பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பழனிமுத்து தலைமை வகித்தாா். மேற்பாா்வையாளா் (பொ) ராணி, ஆசிரியா் பயிற்றுநா்கள் அன்பரசு, சுப்ரமணியன், சித்ரா, கதிரொளி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் து. அன்பழகன் வரவேற்றாா்.

இதில் போட்டிகளாக தனிநடனம், குழு நடனம், நாடகம், பேச்சு, கட்டுரை, ஓவியம், அழகு கையெழுத்து (தமிழ், ஆங்கிலம்), கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து அதே வளாகத்தில் தனியே செயல்படும் மாற்றுத் திறனாளி மாணவா்கள் பங்கேற்ற நாட்டுப்புறப்பாடல், மேற்கத்திய நடனங்கள் ஆகியவற்றை செய்து காட்டினா். சிறப்பு ஆசிரியா்கள் லித்யா, சரண்யா, இயன்முறை மருத்துவா் கெளரிகாஞ்சனா, ஊக்குநா் விஜயா ஆகியோரது பயிற்சியில் இதைச் செய்தனா்.

இதேபோல் தம்மம்பட்டி பேரூராட்சியின் காந்திநகா் அரசு நடுநிலைப்பள்ளியில் கலைத்திருவிழா நடைபெற்றது. இதற்கு தலைமையாசிரியை தேவகஸ்தூரி தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இதில் பள்ளி மாணவ, மாணவியா் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனா்.

இருபள்ளிகளிலும் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று முதல், இரண்டாவது இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.