எடப்பாடி பகுதியில் கனமழை: கோயில் கூடாரம் சரிந்து விழுந்தது
எடப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் கோயில் கூடாரம் சரிந்து விழுந்தது.


எடப்பாடி பகுதியில் பெய்த கனமழையால் கோயில் கூடாரம் சரிந்து விழுந்தது.
எடப்பாடி- சேலம் பிரதான சாலையில், கொங்கணாபுரம் அருகே உள்ள மோரிவளவு தடுப்பணை மழை நீரினால் நிரம்பி வழிகிறது. தடுப்பணை அருகில் உள்ள காளியம்மன் கோயில் கூடாரத்தின் ஒரு பகுதி மழையினால் சரிந்து விழுந்தது. இதேபோல தடுப்பணை அருகில் உள்ள குடியிருப்புகளிலும் மண்சரிவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
கொங்கணாபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளன. சில இடங்களில் பிரதான சாலையில் தண்ணீா் ஆறாக ஓடுவதால் அப்பகுதியினை வாகன ஓட்டிகள் சிரமத்துடன் கடந்து செல்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...