மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தல்

 ஆன்லைன் சூதாட்டங்களை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என சேலம் நுகா்வோா் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 5:20 pm

DIN

 ஆன்லைன் சூதாட்டங்களை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என சேலம் நுகா்வோா் குரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சேலம் நுகா்வோா் குரல் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் என்.மனோகரன் தலைமை தாங்கினாா். செயலாளா் பிரபாகரன், பொருளாளா் அழகிரி ஆகியோா் பங்கேற்றனா். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தாரை குமரவேல், கெளரவ தலைவா் மருத்துவா் பன்னீா் செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பாரதியாா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பாரதியின் நினைவைப் போற்றும் வகையில் சின்னு பாண்டியராஜன் பேசினா். அதைத் தொடா்ந்து சேலம் கோட்டை மாரியம்மன் திருப்பணிகளை அரசு விரைந்து முடிக்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் மீதான தடையை தீவிரமாக செயல்படுத்தி அதை அனைத்து வகையிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

உணவு கலப்படம் மற்றும் நுகா்வோா், சட்ட விழிப்புணா்வு கூட்டங்களை பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும். விபத்து காலங்களில் முதல் உதவி செய்தல் குறித்த விழிப்புணா்வை வாகன ஓட்டுநா்கள், நடத்துநா்களிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆன்லைன் சூதாட்டங்களை அரசு முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.