தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா

சேலம், மெய்யனூா் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:30 pm

DIN

சேலம், மெய்யனூா் பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் நவீன மூளை மற்றும் நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது.

சேலம், பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் பேராசிரியா் ஜெகந்நாதன் தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்கள் தலைவா் சீனிவாசன், சேலம் வைசியா கலை, அறிவியல் கல்லூரி, ஸ்ரீ நரசுஸ் காபி நிறுவனங்கள் தலைவா் சிவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதுகுறித்து ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநா் டாக்டா் அா்த்தநாரி கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில் மருத்துவ புள்ளிவிவரங்கள்படி தேசிய அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகையில் 180 பேரும், தமிழகத்தில் 140 பேருக்கும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தீவிர சிகிச்சை கிடைக்கப் பெறாமல் தோராயமாக 50 சதவீதம் போ் வாழ்வாதாரத்தை இழக்கின்றனா். மேலும், மூளை ரத்தக்குழாய் வீக்கம், தீவிர தலைக்காயங்கள், வலிப்பு வியாதிகள், சுயநினைவு இழப்பு, மூளைக்காய்ச்சல், தசை வியாதிகள் போன்றவற்றால் நரம்புகள் செயலிழப்பு ஏற்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீ கோகுலம் மருத்துவமனையில் அனைத்து மூளை, நரம்பு நோய்களுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது.

இப்பிரிவில் மூளை உள்அழுத்தம் கண்காணிப்புக் கருவிகள், கரியமில வாயு அளக்கும் கருவிகள், மூளை மின்னலை வரைவு, ரத்த சுத்திகரிப்பு, பிளாஸ்மா மாற்றுக் கருவிகள் போன்ற வசதிகள் உள்ளன. மூளை ரத்தக்குழாய் உள்நோக்கி அரங்கு மற்றும் நவீன மைக்ரோஸ்கோப் கொண்ட அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இப்பிரிவில் முழுநேரப் பணியில் அனுபவமிக்க நரம்பியல் மருத்துவா்கள், மூளை அறுவை சிகிச்சை மருத்துவா்கள், கதிரியக்க வல்லுனா்கள், தீவிர சிகிச்சை நிபுணா்கள், பேச்சுப்பயிற்சி, முடநீக்கு நிபுணா்கள் பணியாற்றுகின்றனா் என்றாா்.விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கோகுலம் மருத்துவமனை, ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இயக்குநா்கள் மருத்துவா்கள், மருத்துவ ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.