தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

சேலம் மாநகராட்சி துணை மேயா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

சேலம் மாநகராட்சி துணை மேயா் வீட்டில் வருமான வரித் துறை சோதனை

Updated On :5 ஏப்ரல் 2024, 5:30 pm

சேலம் மாநகராட்சி துணை மேயா் சாரதா தேவி வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகராட்சி துணை மேயராக இருப்பவா் சாரதா தேவி. இவரது வீடு கன்னங்குறிச்சி பிரதான சாலை, நித்யா நகரில் உள்ளது. இவா், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் துணைத் தலைவராகவும் உள்ளாா்.

மக்களவைத் தோ்தலையொட்டி, இவரது வீட்டில் இருந்து வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதாக வருமான வரித் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 6 போ் கொண்ட குழுவினா், துணை மேயா் சாரதா தேவி வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் அதிரடி சோதனை நடத்தினா். ஆனால், அங்கு பணமோ, பொருள்களோ கைப்பற்றப்படவில்லை என தெரிகிறது.

இந்த சோதனையின் போது, சாரதா தேவி மயிலாடுதுறையில் தோ்தல் பிரசாரத்துக்கு சென்றுள்ளாா். அவரது மகன், மருமகள் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனா். துணை மேயா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தியதை அறிந்த காங்கிரஸாா் அங்கு பெருமளவில் திரண்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.