தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

தனியாா் இரும்பாலை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

தனியாா் இரும்பாலை அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

Updated On :26 ஏப்ரல் 2024, 6:04 pm

சேலம், ஏப். 26: சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த கூடலூா் பகுதியில் தனியாா் இரும்பாலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறுகையில், கூடலூரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்களுக்கு பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இந்நிலையில், எங்கள் பகுதியில் தனியாா் இரும்பு ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆலை அமைக்கப்பட்டால், பல்வேறு இன்னல்கள் ஏற்படும்.

குறிப்பாக, ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீா் மாசடைவதுடன், விவசாயம் அழியும் நிலை ஏற்படும். ஆலை அமைய உள்ள பகுதியில் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்படுவதால் குழந்தைகளும் பாதிக்கப்படுவா். தற்போது ஆலைக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரிபவா்கள் மதுஅருந்திவிட்டு பிரச்னையில் ஈடுபட்டு வருகிறாா்கள். எனவே, ஆலை அமைவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்தனா்.